Pages

Tuesday, March 13, 2012

டெரர் கும்மியும்---எனக்கு கிடைக்காத பரிசும்...(சதி திட்டமா???)

அன்பர்களே ....


டெரர் கும்மி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன....
இந்த அறிவிப்பு வந்ததுமுதல் என் மெயில் இன்பாக்ஸ் முழுவதும்...
கணக்கிடமுடியாத அளவுக்கு...(...!!!???) மெயில்கள் ....


(இன்னிக்கு கும்மி விருது அறிவிக்கபோறோம் என்று முன்கூட்டியே 
எனக்கு சொல்லி இருந்தால்...நான் விளக்க போஸ்ட் போட்டிருப்பேன்...)


அது என்னானா...
உலகம் முழுவதும் இருந்து என் ரசிகர்கள்...(..!!!???)
இந்த விருதுக்கு ஆட்சேபம் தெரிவித்து...
நிறைய பேர்...தீ குளிக்க போவதாகவும்,,பஸ்,,ரயில் ,,விமானம்,,& கப்பல்-
மறியல் செய்யபோவதாகவும்...இந்த விஷயத்தை உடனடியாக...
ஐ.நா. சபைக்கு தெரியபடுத்தி...இலங்கை தீர்மானத்துக்கு முன் 
இந்த விஷயத்தை எடுக்க சொல்லி வலிறுத்த போவதாகவும்...
இன்னும் நிறைய போராட்டங்களை அறிவிக்கபோவதாகவும்...
இப்படி எல்லாம் சொல்லி மெயில் அனுப்பி இருந்தாங்க...
மெயில்-ன் எண்ணிக்கை நமது கருப்பு பணத்தை விட...பலமடங்கு ..


உலகில் உள்ள எல்லா சர்வர்-களும் ஹாங் ஆய்டுச்சினா பாருங்களேன்...
எல்லா மெயில்-ஐயும் என்னால் படிக்க முடியவில்லை என்பதால்...
ஒரு சில மெயில்-களை படித்து ...அதன் பின் மற்ற மெயில்-களின் 
சார அம்சம் இதுதான் என்று புரிந்துகொண்டேன்...
இது மட்டுமா...போன் மூலமும் ஏகப்பட்ட விசாரிப்புகள்....
[விஷயத்துக்கு வாடாஆஆஆஆ]


அதாவது எனக்கு [நாய்-நக்ஸ்]ஒரு பிரிவில் கூட விருது தரவில்லை...
இது கண்டிப்பா ஒரு தலை பட்சமானது....
இந்த விருதை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்...
கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்...
இதற்க்காக நாய்-நக்ஸ் ரசிகர்கள் அனைவரும்...விரைவில் ஒன்று கூடி 
அடுத்த கட்ட நடவடிக்கை-ஐ ஆலோசிக்கவேண்டும்....


இதுதாங்க...அந்த மெயில்-ன் சார அம்சம்...


என்னால்...அவ்வளவு மெயில்-களுக்கும் பதில் அனுப்ப முடியாது என்பதால்...
இந்த போஸ்ட்..


என் அன்பார்ந்த ரசிக கண்மணிகளே ...[பார்ர்ர்ர்ர்ர்ரா]...
கும்மி விருதுகள் அறிவித்த உடனே எனக்கு நிறைய மெயில்-கள்...
என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று...
அப்படி கலந்து கொண்டால் போட்டி இடும் யாருக்கும் எந்த பரிசும் 
கிடைக்காது...எல்லா பரிசும் உங்களுக்கே கிடைத்து விடும் ...
தயவு செய்து கருணை காட்டுங்கள்...நாங்கள்---"நீங்கள் தான் 
அனைத்திலும் டாப் என்று ஒத்துக்கொள்கிறோம்"---என்று...


இப்படி,...வந்த மெயில்கள் என்னை கண் கலங்க வைத்தது...
உடனே முடிவு பண்ணேன் ...இந்த விருதுக்கு...நமது போஸ்ட்-ஐ 
பதிவு பண்ண வேண்டாம் என்று...{யாருப்பா அது...நெஞ்சிலும்,,,வயிற்றிலும்
அடித்துக்கொண்டு அழுவது.???}


ஆகவே...என் மக்களே...அப்பவே இந்த முடிவை நான் அறிவித்திருந்தால்...
இப்போது மாதிரியே...அப்போதும்...இப்படி போராட்டம்...பண்ணுவீர்கள் என்பதால்....நான் உங்களிடம் மறைத்துவிட்டேன்....
மன்னிக்கவும்...என் ரசிக கண்மணிகளே...மீண்டும் மற்றொரு போட்டியில்..
நமது----இல்லாத திறமையை காண்பிப்போம்....
அதுவரை அமைதி காக்கவும் என்று...உங்களை..
இரு கரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்...


டாய்...டாய்....டாய்....யாருடா அது.....நல்லா தூங்கிக்கிட்டு இருக்கவன் மேல
தண்ணி ஊத்துனது...?????
ச்சே ...கனவா....????


ஹி...ஹி...ஹி...உண்மையை சொல்லுகிறேனே.....
நான் போட்டில கலந்துக்கிட்டாலும்...முதல் ரவுண்டு-லேயே 
வெளியேறபோவது...உறுதி ...இந்த சினிமாவுல வர மாதிரி....
ரிஜக்ட் ஆன நம்ம பேப்பர்...ஏதாவது காத்துல பறந்து...
நம்ம பேர் முன்னாடி வந்துடுச்சினா...நடுவர்களுக்கும்...கெட்ட பேர்.....
போட்டியை நடத்துரவுங்களுக்கும் கெட்ட பேர்.....


என்னால எவ்வளவு பெரிய சங்கடமும் யாருக்கும் வரக்கூடாது...என்கிற 
நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல எண்ணத்துலதான் நான் கலந்துக்கலை....
{கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....துப்புங்க எஜமான் துப்புங்க}


டிஸ்கி :- இந்த பதிவு சும்மா நகைசுவைக்காகவே...(அப்படி ஒண்ணு இதுல இருந்தா...!!!!????)...நானும் ஒரு மாசமா...பதிவு தேத்த எவ்வளவு கஷ்டபடுறேன் 
தெரியுமா????...சட்டில இருந்தா தானே அகப்பைல வரதுக்கு....[அப்பாடா..இந்த 
மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சி...போங்க...போங்க...இனி..அடுத்த..உலக 
மகா போஸ்ட்..வரும்போது நானே சொல்லி அனுப்புறேன்...]


பரிசு பெற்ற அனைவருக்கும்...மீண்டும்...மீண்டும்...வாழ்த்துக்கள்...
கும்மி குரூப் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
அடுத்த முறையாவது...நான் வெற்றி பெறுமாறு எனக்காக...ஒரு பிரிவு,,,
பரிசு ரெடி பண்ணவும்...
[தலைப்புக்கு நன்றி...சி.பி]
(கொளுத்திபோட்டிங்)




                                                                                                                                                                                                                                                                                                                                           

Tuesday, March 6, 2012

O.C.நெய் பொங்கல்


அன்பர்களே...


அதிகமாக...O.C.-ல நெய் பொங்கல்,,,
புளியோதரை...
சுண்டல்,,,சக்கரை பொங்கல்..எல்லாம் ...
சாப்பிட்டா....இப்படிதான்...கொழுப்பு..
நெண்டுமாம்...


அன்பர்களே ...இந்த புகை படம்....
பார்த்துட்டு...காஞ்சி( ஆய் MAN ) நினைவு வந்தா..நான் பொறுப்பு இல்லை...




இதுக்கு அப்புறம்....
உங்க...இஷ்டம்...


அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை ....கிழிந்து 
தொங்கட்டும்......


ரெடி...ஸ்டார்ட் ...மியூசிக்.....